மணிப்பூரில் பாரத நீதி யாத்திரையை 2வது நாளாக தொடர்ந்த ராகுல் காந்தி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாரத நீதி யாத்திரையின் 2வது நாள் பயணத்தை மணிப்பூரில் உள்ள கலப்பாஹர் பகுதியில் இருந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடங்கினார். பாரத ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் முதல் கட்ட யாத்திரையை குமரியில் தொடங்கி காஷ்மீரில் நிறைவு செய்த ராகுல்காந்தி தற்போது 2ஆம் கட்ட யாத்திரையை தொடங்கி உள்ளார். மணிப்பூரில் உள்ள தவுபாலில் ஞாயிற்றுக்கிழமை அன்று தனது 2ஆம் கட்ட யாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி, இன்று இரண்டாவது நாளாக பாரத நீதி யாத்திரையை தொடர்ந்தார். காங்க்போக்பி நகருக்கு அருகே உள்ல கலப்பாஹர் பகுதியில் 2ஆம் நாள் நடைபயணத்தை தொடங்கிய ராகுல் காந்தியுடன், ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day