மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு விசாரணை பிப். 5-க்கு ஒத்திவைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுமீதான விசாரணையை பிப்ரவரி 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி ரௌஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முன்னாள் துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவருமான மனிஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்யாததால், விசாரணையை பிப்ரவரி 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி ரௌஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டது. 

varient
Night
Day