மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. மதுபான கொள்கை முறைகேட்டில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அமலாக்கத்துறையினர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது வழக்குபதிவு செய்து, 8 முறை விசாரணைக்கு ஆஜாராகும்படி சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால், கெஜ்ரிவால் ஆஜராகாமல் புறக்கணித்து வந்தார். இந்நிலையில், கெஜ்ரிவாலுக்கு எதிராக டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் இன்று நேரில் ஆஜராக கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி, இன்று நேரில் ஆஜரான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Night
Day