மதுபான கொள்கை முறைகேடு வழக்கு : கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் நேரில் ஆஜராகும் படி, ஆம்ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 7-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு, சட்ட விரோதப் பண பரிமாற்ற வழக்குகளில் டெல்லியின் முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை மேற்கொள்வதற்கு நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகவில்லை. தற்போது 7-வது முறையாக அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. வருகிற 26ம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அமலாக்கத்துறை சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day