மத்தியபிரதேசம்: பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து - 11 பேர் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மத்தியப்பிரதேச மாநிலத்தில் பட்டாசு கிடங்களில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். ஹர்தா மாவட்டத்தில் உள்ள பைராக்கர் கிராமத்தில் பட்டாசு ஆலை மற்றும் சேமிப்பு கிடங்கில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.  வானுயர தீப்பிழம்புகளோடு பட்டாசுகள் வெடித்து சிதறிய நிலையில், விரைந்து வந்த மாநில பேரிடர் மீட்பு குழுவினர் வெடி விபத்தில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். வெடி விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள்  மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. 

varient
Night
Day