இந்தியா
பாகிஸ்தான் கருத்தால் சர்ச்சை - நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்...
அண்மையில் நடைபெற்ற விசாரணையின் போது நீதிபதி வேதவியாசச்சார் ஸ்ரீஷானந்தா ?...
மத்தியப்பிரதேசத்தில் திருமண ஊர்வலத்துக்குள் சரக்கு லாரி புகுந்து 6 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேசத்தில் உள்ள ரெய்சனில் 30 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட திருமண ஊர்வலம் நடைபெற்றது. அப்போது அதிவேகமாக வந்த சரக்கு லாரி, எதிர்பாராத விதமாக ஊர்வலத்துக்குள் புகுந்தது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயும், 2 பேர் சிகிச்சை பலனின்றியும் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 10 பேருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அம்மாவட்ட ஆட்சியர் அரவிந்த் குமார் டூபே தெரிவித்துள்ளார். மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய லாரி ஓட்டுநரை போலீசார் தேடி வருவதாகவும், போபாலில் இருந்து வந்த ராஜந்தான் பதிவு எண் கொண்ட லாரி விபத்தை ஏற்படுத்தியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் ஆட்சியர் அரவிந்த் குமார் டூபே தெரிவித்தார்.
அண்மையில் நடைபெற்ற விசாரணையின் போது நீதிபதி வேதவியாசச்சார் ஸ்ரீஷானந்தா ?...
கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு தேவையான பேருந்து வசதிகளை 4 வாரங்களில் ஏற?...