மத்திய அமைச்சர் ஷோபா மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய விவகாரத்தில், மத்திய இணை அமைச்சர் ஷோபா மீதான வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சர்ச்சை பேச்சு தொடர்பாக மத்திய இணை அமைச்சர் ஷோபா மீது 3 இடங்களில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு அமைச்சர் ஷோபா ஆஜராகுமாறு போலீசார் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. போலீசார் விசாரணைக்கு எதிராக அமைச்சர் ஷோபா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Night
Day