மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மருத்துவக்‍ காப்பீடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் 31 கோடி குடும்பத்தினர் மருத்துவக்‍ காப்பீடு அட்டை பெற்றுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் பொதுமக்‍களுக்‍கு மருத்துவக்‍ காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஒவ்வொரு குடும்பத்தினரும் 5 லட்சம் மதிப்பிலான மருத்துவ சேவைகளை பெறமுடியும். ஆயிரத்து 300 க்கும் மேற்பட்ட மருத்துவ திட்டங்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதுடன், பல உயர் சிகிச்சைகளுக்கு இந்த மருத்துவக்‍ காப்பீடு அட்டையை பயன்படுத்தி சிகிச்சை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. 

Night
Day