மத்திய அரசின் இடைக்‍கால பட்ஜெட் பொதுமக்‍களுக்‍கு பயனற்றது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மத்திய அரசின் இடைக்‍கால பட்ஜெட் பொதுமக்‍களுக்‍கு பயனற்றது என்று சமாஜ்வாதி கட்சி தலைவரும் உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
 தனது எக்‍ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள அகிலேஷ் யாதவ், நாட்டு வளர்ச்சி அல்லது மக்‍களின் வளர்ச்சி நோக்‍கை இலக்‍காக கொள்ளாத எந்த பட்ஜெட்டும் பயனற்றது என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆளும் பாஜக அரசு மக்‍கள் விரோத பட்ஜெட்டை தாக்‍கல் செய்து வெட்கக்‍கேடான சாதனை படைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த சூழலில் நேர்மறையான அரசு மத்தியில் பதவியேற்க வரும் வேளை இது என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

Night
Day