மத்திய அரசு அறிவித்த சி.ஏ.ஏ.,வின் விதிகளில் தெளிவு இல்லை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மத்திய அரசு அறிவித்த குடியுரிமை சட்டத்திருத்த விதிகளில் தெளிவு இல்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ஹப்ராவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் மேற்கு வங்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவித்தார். மேலும்,  சி.ஏ.ஏ.,வின் விதிகளில் தெளிவு இல்லை என்றும்,  சிஏஏ-வை விண்ணப்பிக்கும் முன் பலமுறை மக்கள் சிந்தித்து விண்ணப்பியுங்கள் என்றும் எச்சரிக்கை விடுத்தார். குடிமக்களுக்கு இருக்கும் உரிமைகளைப் பறிக்கும் செயல் என தெரிவித்த மம்தா பானர்ஜி, சிஏஏ அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது மற்றும் பாரபட்சமானது என்றும் குற்றம்சாட்டினார்.

Night
Day