மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே மீது வழக்குப்பதிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பெங்களூர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் இரு தரப்பினரிடையே மோதலை தூண்டும் வகையில் பேசியதாக மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே மீது மதுரை சைபர் கிரைம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கர்நாடகா மாநிலம் மத்திய பெங்களூரு நகரத்தப்பேட்டையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய ஷோபா கரந்தலாஜே, 
பெங்களூரில் நடந்த ராமேஸ்வரம் கபேயில் வைக்கப்பட்ட குண்டு, தமிழகத்தை சேர்ந்தவர்களால் வைக்கப்பட்டது எனவும், தமிழகத்தில் இருந்து மக்கள் பயிற்சி பெற்று இங்கு வெடிகுண்டுகளை வைக்கிறார்கள் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்த நிலையில் , அவர் மீது மதுரை சைபர் கிரைம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Night
Day