மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடும் விமர்சனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சிகளின் மஹா விகாஸ் அகாடி கூட்டணியை  'அவுரங்கசீப் ரசிகர் மன்றம்' என்றும் அந்த மன்றத்தின் தலைவர் உத்தவ் தாக்கரே என்றும மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார். 
புனேயில் நடைபெற்ற பாஜகவின் மாநில மாநாட்டு நிகழ்ச்சியில் பேசிய அவர், அவுரங்கசீப் ரசிகர் மன்றத்தில் உள்ளவர்கள், மும்பை தாக்குதல் குற்றவாளி கசாபுக்கு பிரியாணி வழங்குபவர்கள், யாகூப் மேமனுக்கு கருணை கேட்பவர்கள், ஜாகிர் நாயக்கிற்கு அமைதித் தூதுவர் பட்டம் கேட்பவர்கள் எனக் குறிப்பிட்டார்.  இந்த நபர்களுடன் அமர்ந்திருப்பதற்கு உத்தவ் தாக்கரே வெட்கப்பட வேண்டும் எனச் சாடினார். மேலும் ஊழலின் மிகப் பெரிய தலைவர் சரத் பவார்தான் என்றும் அமித் ஷா தெரிவித்தார்.

Night
Day