மத்திய உள்துறை செயலருடன் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் சந்திப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களவைத் தோ்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், மத்திய உள்துறைச் செயலா் அஜய் பல்லாவுடன் தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் மற்றும் தோ்தல் ஆணையா் அருண் கோயல் ஆகியோா் நேற்று ஆலோசனை நடத்தினாா். மக்களவையுடன் ஆந்திரா, ஒடிஸா, அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய நான்கு மாநில பேரவைத் தோ்தல்களும் சோ்ந்து நடைபெற உள்ளன. எனவே இதற்காக பாதுகாப்புக்காக 3 லட்சத்து 40 ஆயிரம் மத்திய ஆயுதப் படையினா் தேவை எனத் தோ்தல் ஆணையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. அது தொடர்பாகவே தோ்தலின்போது நாடு முழுவதும் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Night
Day