மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்- உச்சநீதிமன்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 கொல்கத்தா பயிற்சி மருத்துவர் படுகொலையை கண்டித்து போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டுமென உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த நிலையில் இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் நடைபெற்ற வழக்கு விசாரணையில், மருத்துவர் படுகொலையை கண்டித்து போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், மருத்துவர்களின் போராட்டத்தால் பொதுமக்கள், நோயாளிகள் பாதிக்கப்படுவதை கண்டுகொள்ளாமல் இருக்கமுடியாது என்றும் அறிவுறுத்தியுள்ளது. 

Night
Day