மறைந்த ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதை - ஏக்நாத் ஷிண்டே

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரும், பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி காலமானார். இதனிடையே, மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உடலுக்கு மஹாராஷ்டிர மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரத்தன் டாடாவின் உடல் தெற்கு மும்பையில் உள்ள கலை நிகழ்ச்சிகளுக்கான தேசிய மையத்தில் இன்று மாலை வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும், அவரது உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Night
Day