மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவிற்கு கொலை மிரட்டல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வெளிநாட்டில் இருந்து தமக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா போலீசில் புகார் அளித்துள்ளார். 

மொத்தம் 90 தொகுதிகள் கொண்ட அரியானா மாநில சட்டப் பேரவைக்கு அடுத்த மாதம் 5ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில், டோக்யோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவும், பாரிஸ் ஒலிம்பிக்கில் துரதிர்ஷ்டவசமாக பதக்க வாய்ப்பை இழந்த மல்புத்த வீராங்கனை வினேஷ் போகத்தும் கடந்த வெள்ளிக்கிழமை காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து தமக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக சோனிபட் நகர், பாகல்கர் காவல் நிலையத்தில் பஜ்ரங் புனியா நேற்று புகார் அளித்தார்.  காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக வேண்டும் என்றும் இல்லையெனில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் பஜ்ரங் புனியாவுக்கு வாட்ஸ் ஆப் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதாவும், இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். 

Night
Day