மாட்டிறைச்சி கடைகள் மீது தாக்குதல் நடத்திய பாஜகவினர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தெலங்கானா: மேடக் மேடக் நகரில் உள்ள மாட்டிறைச்சி கடைக்காரர்களுக்கும், பாஜகவினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேடக் நகரில் பசுவதையை தடை செய்யக்கோரி பாஜகவினர் நேற்று பேரணி நடத்தினர். இந்த பேரணியின்போது மாட்டிறைச்சியை விற்பனை செய்த கடைகள் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியதால், இருத்தரப்பினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில், பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து இருதரப்பினர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க மேடக் நகரில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Night
Day