மார்ச் 6-ம் தேதி இந்திய கடற்படையில் இணைகிறது MH-60R ஹெலிகாப்டா்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

எதிரி நாட்டு நீா்மூழ்கிக் கப்பல்களின் செயல்பாடுகளை முறியடிக்கும் திறனை அதிகரிக்கும் விதமாக MH-60R ஹெலிகாப்டா் இந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளது. வரும் 6-ம் தேதி கொச்சியில் 'ஐஎன்எஸ் கருடா' தளத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் இந்த ஹெலிகாப்டரை படையில் இணைத்து வைக்கிறார். அமெரிக்காவிடமிருந்து 4-ஆம் தலைமுறை 'எம்ஹெச் 60ஆா் ஹெலிகாப்டா்களை' கொள்முதல் செய்த மத்திய அரசு கடந்த 2020-இல் ஒப்பந்தம் மேற்கொண்டது. 24 ஹெலிகாப்டா்களில் இதுவரை 6 ஹெலிகாப்டா்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்திய கடற்படையில் இந்த வகை ஹெலிகாப்டா்களில் மட்டுமே, தன்னைத் தாக்க வரும் ஏவுகணைகளைக் கண்டறிந்து தற்காத்துக் கொள்ளும் தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Night
Day