மீண்டும் பதற்றக் களமாக மாறியுள்ள மணிப்பூரில் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் 3 நாட்கள் மூடல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதிதாக வெடித்த கலவரத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலியானதால் மீண்டும் பதற்ற சூழல் நிலவி வரும் மணிப்பூரில், "நிதி நெருக்கடி" மற்றும் "பல்வேறு அமைப்புகளின் நன்கொடை கோரிக்கைகள்" காரணமாக பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்கள் 3 நாட்கள் மூடப்படுவதாக  உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் கூடுதல் அழுத்தம் ஏற்பட்டால் மேலும் சில நாட்களுக்கு விற்பனை நிலையங்கள் மூடுதல் நீட்டிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தங்களுக்கு வரும் அச்சுறுத்தல்கள் குறித்து முதலமைச்சர் பிரேன் சிங்குக்கு  விற்பனை நிலையங்களின் உரிமையாளர்கள் கடிதம் எழுதியுள்ளனர். இதனிடையே தொடரும் பதற்றம் காரணமாக சுராசந்த்பூர் பகுதியில் இணைய சேவைகளுக்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

Night
Day