மும்பையில் இந்தியா கூட்டணியின் பொதுக் கூட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராகுல் காந்தியின் பாரத ஒற்றுமை நீதி யாத்திரை நிறைவு விழாவையொட்டி சிவாஜி பூங்காவில் பிரம்மாண்ட பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி கடந்த ஜனவரி மாதம் 14ம் தேதி மணிப்பூரில் பாரத ஒற்றுமை நீதி யாத்திரையை தொடங்கினார். அந்த யாத்திரை மும்பையில் நிறைவடைந்தது. இதனையொட்டி சிவாஜி பூங்காவில் யாத்திரை நிறைவு விழா பிரம்மாண்ட பொதுகூட்டத்திற்கு இந்தியா கூட்டணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுக்கூட்ட மைதானத்தில் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரின் பிரம்மாண்ட பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. 

varient
Night
Day