மும்பையில் பாலிவுட் நட்சத்திரங்கள் அக்ஷய் குமார், ஜான்வி கபூர் உள்ளிட்டோர் வாக்குப்பதிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நீண்ட வரிசையில் காத்திருந்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். அப்போது, அங்கிருந்த ரசிகர்களிடம் அவர் பேசி மகிழ்ந்தார்.

இதேபோல் மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகை ஜான்வி கபூர் தனது வாக்கை பதிவு செய்தார். அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் ஃபர்ஹான் அக்தர், இயக்குனர் ஜோயா அக்தர் ஆகியோர் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். வாக்களித்து வந்த பிறகு விரலின் மையினை காண்பித்து இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

5ம் கட்ட மக்களவை தேர்தலையொட்டி, மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் தொழிலதிபர் அனில் அம்பானி தனது வாக்கை செலுத்தினார்.

மும்பையில் உள்ள வாக்குசாவடியில் ஜனநாயக கடமையை ஆற்றிய நடிகர் அனில் கபூர், இந்திய குடிமக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதேபோல், மும்பையில் உள்ள வாக்குசாவடியில் நடிகர் அனுபம் கேர், தனது வாக்கை செலுத்தினார். அடுத்த 5 ஆண்டுகளுக்கு தங்கள் அரசாங்கத்தை தேர்ந்தெடுக்க அனைவரும் வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார்.


Night
Day