மும்பை பங்குச்சந்தை புதிய உச்சம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய பங்குச்சந்தைகள் வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டுள்ளதால் முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சிக்குள்ளாகி வருகின்றனர். கடந்த சில நாட்களாக இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஏறு முகத்தில் இருந்து வருகிறது. அதன்படி, இன்றைய வர்த்தக நேரத்தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 572 புள்ளிகள் உயர்ந்து 80 ஆயிரத்து 013 புள்ளிகளை தொட்டு உச்சத்தை எட்டியுள்ளது. இதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 168 புள்ளிகள் உயர்ந்து 24 ஆயிரத்து 291 புள்ளிகளை எட்டி புதிய உச்சம் தொட்டுள்ளது. எச்டிஎஃப்சி வங்கி, பிரிட்டான்யா, எச்டிஎஃப்சி லைப், கோட்டாக் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்தையும், டிசிஎஸ், சன் பார்மா, அல்ட்ரா டெக் சிமெண்ட், டெக் மகேந்திரா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.

Night
Day