மும்பை - ரூ.100 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

எத்தியோப்பியாவில் இருந்து சுமார் 10 கிலோ கொகைன் போதைப்பொருளை மும்பைக்‍கு கடத்தி வந்த இரு வெளிநாட்டு பெண்களை வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து மும்பை வந்த பயணிகள் மற்றும் அவர்களின் உடமைகளை ​சுங்கத்துறையினர் மற்றும் வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில் எத்தியோப்பியா நாட்டின் தலைநகர் அடிஸ்அபாபாவில் இருந்து மும்பை வந்த தாய்லாந்து நாட்டை சேர்ந்த பெண்களின் உடமைகளை சோதனையிட்டனர். இதில் சூட்கேஸ்களில் மறைத்து வைக்‍கப்பட்ட சுமார் 10 கிலோ எடையுள்ள கொகைன் என்ற போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 100 கோடி ரூபாய் 
என தெரிவித்தனர். இதையடுத்து இரு வெளிநாட்டு பெண்களையும் கைது செய்தனர். 

Night
Day