மும்பை: குடிசைப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை புறநகர் பகுதியான கோவண்டியில் உள்ள ஆதர்ஷ் நகர் குடிசைப் பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. திடீர் தீ விபத்தால் வீடுகளில் இருந்த மக்கள் அலறியடித்து வெளியேறினர். இதில் நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் கடைகள், வீடுகள் என 15 கட்டடங்கள் கடுமையாக சேதமடைந்ததுடன், ஏராளமான பொருட்கள் தீயில் கருகி நாசமடைந்தன. 

varient
Night
Day