மேயர் தேர்தலில் பா.ஜ.க.விடம் தோற்ற ஆம் ஆத்மி - காங். கூட்டணி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அரியானா மாநிலம் சண்டீகரில் நடைபெற்ற மேயர் தேர்தலில் காங்கிரஸ் ஆம் ஆத்மி கூட்டணியை தோற்கடித்து பா.ஜ.க. வெற்றி பெற்றது. கடந்த 18ஆம் தேதி நடைபெற இருந்த மேயர் தேர்தல் கடும் அமளி காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று நடந்த மேயர் தேர்தலில் 16 வாக்குகளை பெற்று பா.ஜ.க.வின் மனோஜ் சோன்கர் வெற்றி பெற்றார். ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரான குல்தீப் சிங்கிற்கு 12 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. 8 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது. அங்கு பா.ஜ.க.வுக்கு 14 கவுன்சிலர்களும், காங்கிரஸ் கட்சிக்கு 7 கவுன்சிலர்களும், ஆம் ஆத்மி கட்சிக்கு 13 கவுன்சிலர்களும், சிரோமணி அகாலி தளம் கட்சிக்கு ஒரு கவுன்சிலர்களும் உள்ள நிலையில் கட்சி மாறி பா.ஜ.க.வுக்கு வாக்களித்தது யார் என பலத்த கேள்வி எழுந்துள்ளது.

Night
Day