மேற்குவங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை- ராஜ்நாத்சிங் கடும் தாக்கு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கொல்கத்தா மருத்துவ மாணவி படுகொலை சம்பவம் தொடர்பாக மேற்கு வங்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க தவறி விட்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் குற்றம் சாட்டியுள்ளார். 

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், கொல்கத்தாவில் மருத்துவ மாணவி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது, தனது நெஞ்சை உலுக்குவதாக கூறினார். இது அவமானகரமானது என்று தெரிவித்த அவர், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க மத்திய அரசு கடுமையான அணுகுமுறையை கடைப்பிடித்து வருவதாகவும், ஆனால் பல மாநிலங்கள் இதனை பின்பற்றவில்லை எனவும் சாடினார். 

Night
Day