மேற்குவங்கம்: சந்தேஷ்காளி பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உண்மைதான்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மேற்குவங்க மாநிலம் சந்தேஷ் காளி பகுதியில் பெண்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட பாலியல் வன்கொடுமைகள் உண்மைதான் என, அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரமுகரான ஷேக் ஷாஜகானும், அவரது கட்சி கூட்டாளிகளும், சந்தேஷ் காளி பகுதியில் உள்ள பெண்களை அத்துமீறி தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக குற்றச்சாட்டு ஒன்று பூதாகரமாக வெடித்துள்ளது. இது தொடர்பாக பேசிய சந்தேஷ்காளி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், கிராமத்து பெண்கள் பாலியல் வன்கொடுமை நடந்ததை எப்படி வெளியில் சொல்வார்கள் என கேள்வி எழுப்பியதுடன், மருத்துவ பரிசோதனை அறிக்கை மூலமாகவே இதை நிரூபிக்க முடியும் எனவும் கூறினார். 

Night
Day