மேற்குவங்கம்: போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் மீது காவல்துறையினர் தடியடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மேற்கு வங்க மாநிலத்தில் பாஜகவினர் நடத்திய போராட்டத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தியதில், அம்மாநில பாஜக தலைவர் சுகந்த மஜூம்தார் காயமடைந்தார். நில அபகரிப்பு, பாலியல் குற்றசாட்டுகளுக்கு உள்ளான ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் நிர்வாகி ஷேக் ஷாஜகானையும், அவரது ஆதரவாளர்களையும் கைது செய்யக் கோரி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். எச்சரிக்கை விடுத்தும் கலைந்து செல்லாததால், போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதில் காயமடைந்த மேற்குவங்க பாஜக தலைவர் சுகந்த மஜூம்தார் மயங்கி விழுந்ததால், அவர் காவல்துறை வாகனத்திலேயே அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Night
Day