மேற்கு வங்கம் - பாஜக வேட்பாளரை விரட்டி விரட்டி தாக்கிய கும்பல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடியை பார்வையிடச் சென்ற பாஜக வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு மித்னாபூர் மாவட்டத்தில் உள்ள கர்பேட்டா பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்காளர்கள் மிரட்டப்படுவதாக தகவல் வெளியானதை அடுத்து, பாஜக வேட்பாளர் பிரனாட் டுடு அங்கு சென்றார். அப்போது அவர் மீதும் அவருடன் வந்தவர்கள் மீதும் கற்களை வீசி சிலர் பயங்கர தாக்குதல் நடத்தனர். பிரனாட்டின் பாதுகாவலர்கள் அவரை பத்திரமாக அங்கிருந்த அழைத்து சென்ற நிலையில், அவரின் கார் அடித்து நொறுக்கப்பட்டது.

Night
Day