மேற்கு வங்கம்: தனியார் கெமிக்கல் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கெமிக்கல் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தால் பரபரப்பு நிலவியது. ஜதிங்கா பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கெமிக்கல் தொழிற்சாலை ஒன்றில் திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டு, அப்பகுதி முழுவதும் வானுயர கரும்புகை சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புதுறையினர் நீண்ட நேரம் கடுமையாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். 

varient
Night
Day