ரத்தன் டாடா இந்திய தொழில்துறையின் டைட்டன் - மத்திய அமைச்சர்கள் புகழாரம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தொழிலதிபர் ரத்தன் டாடாவின் மறைவு வருத்தமளிப்பதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அவர், நமது பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கு அவர் மகத்தான பங்களிப்பை ஆற்றியதாக தெரிரிவித்தார். மேலும் அவர் இந்திய தொழில்துறையின் டைட்டன் என்றும் குறிப்பிட்டார். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்தார்.

இதனிடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பதிவில், "பிரபல தொழிலதிபரும், உண்மையான தேசியவாதியுமான ரத்தன் டாடா மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்தார். தேசத்தின் வளர்ச்சிக்காக தன் வாழ்வை அர்ப்பணித்த ரத்தன் டாடா நமது நாட்டின் நலனுக்கான செய்த அர்ப்பணிப்பு தன்னை வியப்பில் ஆழ்த்தியதாக தெரிவித்தார், மேலும் டாடா குழுமத்திற்கும் அவரது எண்ணற்ற ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார்.


varient
Night
Day