ரயிலில் ரூ.3.85 கோடி மதிப்புள்ள நகைகள், ரூ.49 லட்சம் பணம் பறிமுதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திரா அருகே உரிய ஆவணங்கள் இன்றி ரயிலில் கொண்டு செல்லப்பட்ட 3 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கூடூரில் இருந்து ராஜமுந்திரிக்கு  சென்ற ரயில் பீமாவரம் அருகே வந்தபோது போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.  அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக நடந்துக்கொண்ட 10 பேரிடம் விசாரணை மேற்கொண்டு பைகளை சோதனை செய்தனர். அதில் 3 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 6 கிலோ தங்க நகைகளும், 49 லட்சம் ரூபாய் ரொக்க பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் 10 பேரையும் கைது செய்த போலீசார், நகைகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day