ரயில் விபத்திற்கு பாஜக அரசு பொறுப்பு ஏற்க வேண்டும் - ராகுல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மேற்கு வங்க ரயில் விபத்துக்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தமது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், கடந்த 10 ஆண்டுகளில் ரயில் விபத்துக்கள் அதிகரித்திருப்பதற்கு, மோடி அரசின் அலட்சிய போக்கும், தவறான நிர்வாகத்தின் நேரடி விளைவு காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு இன்றைய விபத்து மற்றொரு உதாரணம் என்று குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, பொறுப்பான எதிர் கட்சி என்ற முறையில் இந்த அப்பட்டமான அலட்சியத்தை எதிர்த்து தொடர்ந்து கேள்வி எழுப்பி, மோடி அரசு இதற்கு பொறுப்பேற்க வைப்போம் என்று கூறியுள்ளார்.

Night
Day