ராகுலின் திறமையின்மையால்தான் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைகிறார்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராகுல் காந்தியின் திறமையின்மையால்தான் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்து வருவதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் தலைவர்கள் பலர், ராகுலின் பேச்சால் மிகவும் கவலை அடைந்துள்ளதாகவும், மல்லிகார்ஜுன கார்கே அல்லது யாராக இருந்தாலும் சரி, காங்கிரஸ் கட்சியில் உள்ள சில நல்லவர்களுக்காகத் தான் வருந்துவதாகவும் குறிப்பிட்டார். மக்களவையில் காங்கிரஸ் தலைவராக உள்ள ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு எந்தவித அதிகாரமும் இன்றி இருப்பதாகவும் கூறினார். ராகுலின் யாத்திரையை விட பாஜகவின் விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா தான் உண்மையான யாத்திரை எனக் குறிப்பிட்ட கிரண் ரிஜிஜு, ஏனென்றால் அது மோடி உத்தரவாதத்தின் செய்தியை மக்களிடம் எடுத்துச் செல்வதாகத் தெரிவித்தார்.

Night
Day