ராகுல்காந்தியின் யாத்திரைக்கு கைது எச்சரிக்கை விட்ட அசாம் முதலமைச்சர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையில் பங்கேற்றுள்ள இரு தீய சக்திகளை கைது செய்யப்போவதாக அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறிய நிலையில், சவாலை சந்திக்கத் தயாராக இருப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தகவல் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், கடந்த இரண்டு நாட்களாக வடகிழக்கு மாநிலத்தில் ராகுல் காந்தியின் நியாய யாத்திரைக்கு கிடைத்த ஆதரவைப் பார்த்து அசாம் முதலமைச்சர் பதற்றமடைந்திருப்பதாக குறிப்பிட்டார். அவரின் அவதூறு மற்றும் மிரட்டலுக்கு காங்கிரஸ் அஞ்சாது என்றும்  இன்னும் சில நாட்கள் அசாமில்தான் யாத்திரை நடைபெறும் என்றும் கைது செய்யட்டும், சவாலை ஏற்கிறோம் எனத் தெரிவித்தார்.

Night
Day