ராகுல்காந்தியை ஆபாசமாக பேசியதாக பாஜக எம்எல்ஏ மீது குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை ஆபாசமாகப் பேசியதாக பாஜக எம்எல்ஏவும், மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தியின் 'பாரத் ஜோடோ நியாய யாத்ரா' குறித்து செய்தியளார்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த சுவேந்து அதிகாரி, ஆபாசமான வார்த்தைகளை பேசி விமர்சனத்திற்கு உள்ளானார். இந்த சம்பவம் குறித்து பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், மேற்கு வங்க காவல்நிலையத்தில் காங்கிரஸ் செயலாளர் சுமன் ராய் சவுத்ரி மற்றும் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் அபிஷேக் பானர்ஜி ஆகியோர் புகார் அளித்துள்ளனர். மேலும், பாஜக தலைவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. 

Night
Day