ராகுல் காந்தியின் நடைபயணத்தில் மம்தா பானர்ஜி பங்கேற்க ஜெய்ராம் ரமேஷ் வேண்டுகோள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியா கூட்டணியில் காங்கிரசுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் மோதலை வலுப்படுத்தியுள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் நுழைந்துள்ள ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்து கொள்ள வேண்டும் என காங்கிரஸ் தகவல் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், மம்தா பானர்ஜி நாட்டின் துணிச்சல் மற்றும் அனுபவம் மிக்க தலைவர் என்றார். இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்வது நமது கடமை என்றும் அதனால் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணத்தில் மம்தா பானர்ஜி கலந்துகொள்ள வேண்டும் என சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட அனைவரும் விரும்புவதாகத் தெரிவித்தார்.

Night
Day