ராஜஸ்தானிலிருந்து எம்.பி.யாக தேர்வாகிறார் சோனியா காந்தி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் 4 பேரின் பட்டியலை காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக  வெளியிட்டிருந்தது. அதில் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி எம்.பி. போட்டியிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சோனியா காந்தி தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார். மனுத்தாக்கலின் போது ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

Night
Day