ராஜஸ்தானில் அதிகபட்சமாக 124 டிகிரி வெப்பம் பதிவு - வெயில் நேரத்தில் ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் வெயில் 122 டிகிரி பாரன்ஹீட்டை கடந்த நிலையில் ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்க டெல்லி துணை நிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

டெல்லியில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், 122 டிகிரி பாரன்ஹீட்டை கடந்துள்ளது. இதனையடுத்து, கட்டுமான தொழிலாளர்கள், மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டோருக்கு நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கட்டாயம் ஓய்வு வழங்க வேண்டும் எனவும், வெப்பம் அதிகம் உள்ள பகுதிகளில் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு குடிநீர் மற்றும் இளநீர் உள்ளிட்டவற்றை வழங்குவதற்கு போதிய நடவடிக்கைகளை எடுக்கவும் டெல்லி துணை நிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

Night
Day