ராஜஸ்தான் - போர்வெல்லில் விழுந்த குழந்தை உயிருடன் மீட்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

ராஜஸ்தான் மாநிலம் பாண்டூகி பகுதியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த இரண்டரை வயது பெண் குழந்தை 18 மணி நேரத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர். 

டவுசா மாவட்டம் பாண்டூகி பகுதியில் விளையாடி கொண்டிருந்த இரண்டரை வயது பெண் குழந்தை எதிர்பாராத விதமாக, அருகில் இருந்த 35 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மற்றும் தீயணைப்பு துறையினர், 18 மணி நேரத்திற்கு பிறகு குழந்தையை உயிருடன் மீட்டனர். குழந்தையை மீட்டவுடன் அங்கிருந்தவர்கள் உற்சாக குரல் எழுப்பி மீட்புப்படையினருக்கு நன்றி தெரிவித்தனர். 

varient
Night
Day