ராஜஸ்தான் முதலமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த சிறைக் கைதிகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன்லால் சர்மாவுக்கு சிறைக் கைதிகள் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாநில உள்துறை அமைச்சர் ஜவகர் சிங் பேதம், ஜெய்ப்பூர் சிறையில் இருந்து மிரட்டல் வந்தது கண்டறியப்பட்டதாகவும், சிறைக்குள் செல்போன் பயன்பாட்டைத் தடுக்கத் தவறியதற்காக இரு ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனிடையே மிரட்டல் விடுத்த கைதிகள் போக்சோ குற்றவாளிகள் என போலீசார் கூறியுள்ளனர். வசுந்தர ராஜே சிந்தியா உள்ளிட்டவர்களைத் தாண்டி பதவியைக் கைப்பற்றிய நிலையில், சிறையில் உள்ள கைதிகள் முதலமைச்சர் பஜன்லால் சர்மாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தது அம்மாநில அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. 

Night
Day