ராஜஸ்தான்: சிவராத்திரி ஊர்வலத்தின்போது மின்சாரம் தாக்கி 14 சிறுவர்கள் காயம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் சிவராத்திரியை முன்னிட்டு நடந்த ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கி சிறுவர்கள் தூக்கி வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாசிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற ஊர்வலத்தில், ஒரு சிறுவன் எடுத்துச் சென்ற இரும்பு பைப் ஒன்று, மேலே சென்று கொண்டிருந்த உயர் அழுத்த மின்கம்பியில் உரசியுள்ளது. இதில் அந்த சிறுவனையும், அவனுடன் இருந்த மற்ற சிறுவர்களையும் மின்சாரம் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த சிறுவர்கள் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து ராஜஸ்தான் மாநில அரசு சிறப்புக் குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. 

Night
Day