ராஜ்பவனை நோக்கி கர்நாடக எம்.பி., எம்.எல்.ஏக்கள் பேரணி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

முடா ஊழல் வழக்கில் கர்நாடக முதலமைச்சர் சித்தாராமையாவை விசாரிக்க, ஆளுநர் அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் காங்கிரஸ் சார்பில் பேரணி நடத்தப்பட்டது.


2017ம் ஆண்டில் முதலமைச்சராக இருந்த சித்தராமையா, மைசூர் நகர மேம்பாட்டு கழகத்தில் முறைகேடு செய்ததாக கூறி, 3 சமூக ஆர்வலர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் முதலமைச்சர் சித்தராமையாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டார். 

எதிர்ப்பு

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தலைமையில் எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் ராஜ்பவன் நோக்கி பேரணியாக சென்றனர். மேலும், ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Night
Day