ராணுவத்தில் நிரந்தர வேலை தேடும் இளைஞர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதி - குடியரசுத் தலைவருக்கு, கார்கே கடிதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அக்னி பாதைத் திட்டம் என்பது ராணுவத்தில் நிரந்தர வேலை தேடும் இளைஞர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதி எனச் சுட்டிக்காட்டி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார். 

மத்திய அரசின் இந்த முடிவால் சுமார் 2 லட்சம் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது என்றும், அவர்களுக்கு நீதியை நிலைநாட்ட வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.  இது தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தை எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்துள்ள மல்லிகார்ஜுன கார்கே, வீரமும், போராட்ட குணமும் உள்ள ஆயுதப் படையில் ஆர்வமுள்ள இளைஞர்களின் நீதிக்கான போராட்டத்தில் காங்கிரஸ், அவர்களுக்குத் துணை நிற்கும் எனப் பதிவிட்டுள்ளார்.

Night
Day