ராமர் கோயிலுக்‍கு பரிசளிக்‍க கையால் செய்யப்பட்ட மிகப்பெரிய பூட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராமர் கோயிலுக்‍கு வழங்குவதற்காக உலகிலேயே முதல்முறையாக 400 கிலோ எடையில், 10 அடி உயரத்தில், நான்கு அடி நீள சாவியுடன் கொண்ட பிரம்மாண்ட பூட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்‍கு பக்‍தர்கள் ஏராளமான அன்பளிப்புகளை வழங்கி வருகின்றனர். இதன்படி அலிகாரைச் சேர்ந்த கைவினைகலைஞர் சத்ய பிரகாஷ் ஷர்மா என்பவர் கோயிலுக்‍கு பரிசளிப்பதற்காக 10 அடி உயரம், 4.5 அடி அகலம் மற்றும் 9.5 அங்குல தடிமன் கொண்ட 400 கிலோ எடையுள்ள பூட்டை தயாரித்துள்ளார்.  இதற்கு நான்கு அடி நீள சாவியும் செய்யப்பட்டுள்ளது. இந்தப் ​பூட்டு தற்போது அயோத்திக்‍கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.  

Night
Day