ராமர் கோயில் திறப்பு - இந்திய பங்குச்சந்தை நிறுவனங்களுக்கு விடுமுறை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு வரும் 22ம் தேதி இந்திய பங்குச்சந்தை நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநில அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் திறப்பு விழா வரும் 22ம் தேதி மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதையடுத்து, இந்திய பங்கு சந்தை நிறுவனங்களுக்கு வரும் திங்கட்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனை ஈடு செய்யும் விதமாக இன்று இந்திய பங்கு சந்தைகள் வழக்கம் போல இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை மதியம் 2.30 மணிக்கு பங்குச்சந்தை திறக்கப்பட்டு, மாலை 5 மணிவரை செயல்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும், நிலுவையில் உள்ள அனைத்து பரிவர்த்தனைகளின் தீர்வும் வரும் 22-ம் தேதி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

varient
Night
Day