ராமர் சிலை புகைப்படம் வெளியானதற்கு தலைமை அர்ச்சகம் கண்டனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கும்பாபிஷேக விழாவிற்கு முன்னதாக அயோத்தி ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள சிலையின் புகைப்படம் வெளியானதற்கு கோயிலின் தலைமை அர்ச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வரும் 22 ஆம் தேதி அயோத்தி கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இந்தநிலையில் கருவறையில் வைக்‍கப்பட உள்ள குழந்தை ராமரின் சிலையின் புகைப்படம் நேற்று வெளியானது. கோயிலில் சடங்கு சம்பிரதாயங்கள் நடந்து வரும் நிலையில், பிரதிஷ்டைக்கு முன்னதாக சிலையின் கண்கள் திறக்கப்படக்‍கூடாது என தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் கூறியுள்ளார். அப்படி செய்தவர்கள் யார் என்பதை கண்டறிந்து நடவடிக்‍கை எடுக்‍கவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

Night
Day