ரூ.84,560 கோடி மதிப்பில் போர் தளவாடங்கள் வாங்க DAC ஒப்புதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராணுவம் மற்றும் இந்தியக் கடலோரக் காவல்படையின் திறன்களை மேம்படுத்த 84 ஆயிரத்து 560 கோடி ரூபாய் மதிப்புள்ள போர்த்தளவாடங்களை வாங்க பாதுகாப்புத்துறை கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  மேலும், வான் பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்த, சிறிய மற்றும் தாழ்வாகப் பறக்கும் இலக்குகளைக் கண்டறியும் திறன் கொண்ட கட்டுப்பாட்டு ரேடார்கள் வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதிக எடை கொண்ட டார்பிடோக்கள், மல்டி-மிஷன் கடல் விமானம் கொள்முதல்  ஆகியவை இந்த திட்டங்களில் அடங்கும். பிரதமர் தலைமையிலான அமைச்சரவைக் குழு இதற்கு இறுதி ஒப்புதல் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

varient
Night
Day