வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்கை விரைவில் விசாரிக்க கோரி முறையீடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் தாக்‍கல் செய்த வழக்‍கை விசாரணைக்‍கு எடுத்துக்‍கொள்ளுமாறு மூத்த வழக்‍கறிஞர் கபில் சிபல் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி வலியுறுத்தியுள்ளார்.
 
கடந்த வாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகலிலும் வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. எதிர்க்‍கட்சியினரின் எதிர்ப்புகளை மீறி வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் வழங்கினார். இதன் பிறகு வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக பலதரப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வருகின்றனர்.

வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே 7 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் நேரடியாக ஆஜராகி வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா தொடர்பான மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று முறையிட்டார்.

Night
Day