வட மாநிலங்களில் சுட்டெரிக்கும் வெயில் - 36 மணி நேரத்தில் 45 பேர் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வடமாநிலங்களில் வாட்டி வதைக்கும் வெயிலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 87 ஆக அதிகரித்துள்ளது. வடமாநிலங்களில் பல பகுதிகளில் 45 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக வெயில் கொளுத்தி வருகிறது. அதிகபட்சமாக டெல்லியில் நாட்டிலேயே இதுவரை இல்லாத அளவாக கடந்த மாதம் 29ம் தேதி 127 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. வெப்ப அலையின் காரணமாக, நேற்று மட்டும் உத்தரப் பிரதேசத்தில் 17 பேரும், பீகாரில் 14 பேரும், ஒடிசாவில் 10 பேரும், ஜார்கண்டில் 4 பேரும் பலியாகினர். இந்த மாநிலங்களில் ஆயிரத்து 300க்கும் மேற்படடோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெப்ப அலை தொடர்வதாலும், வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருவதாலும், உயிரிழப்புகள் அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்பட்டது. அதை உறுதி படுத்தும் வகையில், வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை தற்போது 87 ஆக அதிகரித்துள்ளது. 

Night
Day